Never Stop Learning
Republic Day Speech In Tamil | குடியரசு தின பேச்சு போட்டி
(Click the heading to learn to read)


குடியரசு தின பேச்சுப் போட்டி
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் என் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.
இந்தியாவில் சுமார் 200 நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கழகங்களையும் புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேச தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூரும் நாள் குடியரசு தினம் ஆகும்.
அவர்களின் போராட்டத்தால் தான் இன்று நாம் மனித உரிமைகளைப் பெற்று ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆம் அடிமை, தீண்டாமை, வறுமை, கல்வி அறிவின்மை போன்ற எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்த நம் முன்னோர்கள், வருங்கால சந்ததியினர் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக மக்களாட்சியை உருவாக்கினார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வித்திடும் எனக் கருதி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. ஜனவரி 24ம் தேதி 1950 ம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான [பூர்ண சுவராஜ்] ஜனவரி 26ம் தேதியை மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட அமைச்சரவை முடிவு செய்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேரு தலைநகர் டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றி, முதலாவது குடியரசு தினக் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார். அடுத்து கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்து இருக்கிறது, என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும் சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!
வாழ்க பாரதம்!! ஜெய்கிந்த்!! நன்றி!!
reference tags:
Tamil Speech | Speech in Tamil | Republic day speech in tamil | tamil pechu poti | | kudiyarasu thina speech in tamil | pechu potti | குடியரசு தின பேச்சு போட்டி | பேச்சு போட்டி
© 2025. All rights reserved.