Tamil kaditham | தமிழ் கடிதம் | Tamil letter writing | உறவுமுறை கடிதம் | Uravu Murai Kaditham | அலுவலக கடிதம் | Aluvalaga Kaditham

kaditham eluthuvathu eppadi, kaditham eluthum murai,  கடிதம் எழுதும் முறை, கடிதம் எழுதுவது எப்படிkaditham eluthuvathu eppadi, kaditham eluthum murai,  கடிதம் எழுதும் முறை, கடிதம் எழுதுவது எப்படி
கடிதம் என்றால் என்ன?

கடிதம் என்பது ஒருவர் தனது எண்ணங்களை, தகவல்களை அல்லது செய்திகளை மற்றொருவரிடம் எழுதித் தெரிவிக்கும் ஒரு எழுதுதல் வடிவமாகும். இது பழைய காலங்களில் முக்கியமான தொடர்பாடல் முறையாக இருந்தது.

கடிதத்தின் அம்சங்கள்:

தகவல்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அழுத்தமான முறையில் அனுப்புதல்.

நண்பர்கள், உறவினர், அரசு அலுவல்கள், பள்ளி அல்லது வேலை தொடர்பான தகவல்களை பகிர்வதற்கான வழி.

மரியாதை, அனுசரணம் மற்றும் இலக்கியப் பயிற்சிக்கான ஒரு பயனுள்ள வடிவம்.

கடிதத்தின் வகைகள்:
1. உறவுமுறை கடிதம் :

( Informal letter in Tamil )

உறவினர்க்கும், நண்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் எழுதும் கடிதம் உறவுமுறை கடிதம் (uravu murai kaditham ) ஆகும்.

2. அலுவலக கடிதம்:

( Formal letter in Tamil )

பள்ளி, அரசு அலுவல்கள், நிறுவனங்களுக்கான கடிதம் அலுவலக கடிதம் (aluvalaga kaditham ) ஆகும்.

உறவுமுறை கடிதம் எழுதும் முறை

1. கடிதம் எழுதுவோர் கடிதத்தின் வலப்பக்கத்தில் தம் வீட்டு எண், தெருவின் பெயர், ஊர்ப்பெயர், எழுதப் படும் நாள் ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிட வேண்டும். கடைசிச் சொல்லுக்கு முற்றுப்புள்ளியும், ஏனையவற்றுக்குக் காற்புள்ளியும் அவசியம் இட வேண்டும்.

2. இரண்டாம் பகுதியில் யாருக்குக் கடிதம் எழுதுகிறோமோ அவரை அழைத்தல் வேண்டும். (எ.டு. அன்புள்ள அப்பாவுக்கு, அன்பு நண்பனுக்கு )

3. மூன்றாவது பகுதி தெரிவிக்க வேண்டிய செய்தி. கடிதம் எழுதுபவருக்கு முதலில் "வணக்கம்" என்று எழுதி நம் நலம் தெரிவித்து, அவர் நலம் கேட்க வேண்டும்.

(எ.டு. வணக்கம்.நலம், நலமறிய ஆவல்)

4. கடிதத்தின் இறுதியில் வலப் பக்கத்தின் கீழே "அன்புள்ள,' "தங்கள் அன்புக்குரிய," என்று எழுதி அதன் பக்கத்தில் காற்புள்ளியிட்டு அதன் கீழே கையொப்பமிட வேண்டும்.

5. கடிதத்தின் இறுதியில் இடப்பக்கத்தின் கீழே கடிதத்தைப் பெறுபவரின் முகவரியை எழுத வேண்டும். அஞ்சல் குறியீட்டு எண் எழுதுதல் சரியான முகவரியைக் கடிதம் அடைவதற்கு உறுதுணை செய்யும்.

அலுவலக கடிதம் எழுதும் முறை

1. அலுவலகக் கடிதமாயின் இடப்பக்கத்தில் முதலில் அனுப்புநர் முகவரியும் அதன்கீழ் பெறுநர் முகவரியும் எழுது வேண்டும்.

2. பின் கடிதம் யாருக்கு எழுதப்படுகிறதோ அவருக்கு வணங்கம் என்று எழுதி வழக்கம் போல் செய்தியை எழுதலாம்.

3. கடிதத்தில் மூத்தவர்களுக்கு வணக்கமும், இளையவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தல் வேண்டும்.

4. கடிதத்தின் இறுதியில் வலப் பக்கத்தின் கீழே "அன்புள்ள,' "தங்கள் அன்புக்குரிய," என்று எழுதி அதன் பக்கத்தில் காற்புள்ளியிட்டு அதன் கீழே கையொப்பமிட வேண்டும்.

5. கடிதத்தின் இறுதியில் இடப்பக்கத்தின் கீழே கடிதத்தைப் பெறுபவரின் முகவரியை எழுத வேண்டும். அஞ்சல் குறியீட்டு எண் எழுதுதல் சரியான முகவரியைக் கடிதம் அடைவதற்கு உறுதுணை செய்யும்.

tamil kaditham eluthum murai and kaditham eluthuvathu eppaditamil kaditham eluthum murai and kaditham eluthuvathu eppadi
கடிதம் என்பது உணர்வுகள் மற்றும் தகவல்களை எழுதித் தொடர்புகொள்வதற்கான ஒரு முக்கியமான வழி.

Reference tags:

Tamil kaditham | Tamil kaditham Format |Tamil kaditham for friend | informal letter in tamil | kaditham in Tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | nanbanukku kaditham | Tamil letter writing | Tamil composition | Tamil letter writing for school students | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | நண்பனுக்கு கடிதம் | நண்பனுக்கு கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் எழுதும் முறை | கடிதம் தலைப்புகள் | தோழிக்கு கடிதம் எழுதும் முறை | பாராட்டு கடிதம் | Letter writing format in Tamil | how to write a informal letter in Tamil | how to write kaditham in Tamil | Tamil formal letter writing | formal letter in tamil | aluvalaga kaditham in Tamil | tholilmurai kaditham | அலுவலக கடிதம் | தொழில்முறை கடிதம் எழுதும் முறை | கடிதம் தலைப்புகள் | அலுவலக கடிதம் எழுதும் முறை | புகார் கடிதம் | how to write a formal letter in Tamil