ஜவஹர்லால் நேரு | Jawarharlal Nehru

(Click the heading to learn to read)

குழந்தைகள் தினம்

முன்னுரை

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று" என்ற வரிகள் குழந்தைகளின் பண்பைக் குறிக்கிறது. அப்படிபட்ட குழந்தைகளைக் கொண்டாடப்படும் நாளான குழந்தைகள் தினத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நேருவும் குழந்தைகளும்

முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறையும், அன்பும் கொண்டவர். குழந்தை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள். எனவே அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாப்படுகிறது.

வருங்கால இந்தியா

குழந்தைகள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுவதற்கு முக்கிய நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க செய்வதே ஆகும்.

எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆற்றல் பெற்றவர்கள் குழந்தைகள். எனவே நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளது பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற பழமொழிக்கு ஏற்றார் போன்று, குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும்.

மனதில் கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நம் கடமை

குழந்தைகளுக்கு எதிராக பெண்சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல் எனப் பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றை எல்லாம் தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையான குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

முடிவுரை

"தேசத்தின் சொத்தானது களஞ்சியத்தில் இல்லை கல்வி பயிலும் பள்ளிகளில் இருக்கிறது" என்றார் நேரு. அப்படிப்பட்ட செல்வங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுப்போம்.

நன்றி!

குழந்தைகள் தின விழா கட்டுரை | kulanthaigal dhinam katturai | children's day speech in Tamil
குழந்தைகள் தின விழா கட்டுரை | kulanthaigal dhinam katturai | children's day speech in Tamil

நேரு பற்றி 10 வரிகள்:-

1. ஜவகர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார்.

2. நேருவின் தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி அம்மையார்.

3. 1912-ல் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

4. நேருவின் மனைவி கமலா நேரு. இவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி (இந்திரா காந்தி] என்ற மகள் பிறந்தார்.

5. 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், நேருவை சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.

6. நேரு சுதந்திர போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். "இந்தியாவின் கண்டுபிடிப்பு", அவர் படைப்புகளில் சிறந்தது.

7. இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும்.

8. இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக "நேரு மாமா" என்று அழைப்பார்கள்.

9. இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி, சமாதானப் புறா போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

10. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள் மரணம் அடைந்தார்.

நன்றி!

kulanthaigal dhinam katturai | குழந்தைகள் தின விழா கட்டுரை | children's day speech in tamil
kulanthaigal dhinam katturai | குழந்தைகள் தின விழா கட்டுரை | children's day speech in tamil

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Jawaharlal Nehru speech in Tamil | Nehru speech i tamil | நேரு பற்றிய பேச்சு போட்டி | ரோசாவின் ராசா பேச்சு போட்டி | ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி | குழந்தைகள் தினம் பற்றிய பேச்சு போட்டி | jawaharlal nehru pechu potti | nehru speech in Tamil 10 lines | children's day speech in Tamil | குழந்தைகள் தின விழா கட்டுரை | kulanthaigal dhinam katturai | children's day speech in Tamil | குழந்தைகள் தினம் கட்டுரை | kulanthaigal thina vila katturai

Reference tags: