Never Stop Learning
மகாத்மா காந்தி
(Click the heading to learn to read)
மகாத்மா காந்தி பற்றி 10 வரிகள் :-
1. மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார்.
2. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயின் பெயர் புட்லி பாய்.
3. காந்தி ஜி தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் கஸ்தூரி பாய்.
4. காந்தி ஜி லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
5. அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
6. பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
7. சத்தியமும் அகிம்சையும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள்.
8. காந்திஜி ஒத்துழையாமை இயக்கம், தண்டி மார்ச், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய இயக்கங்களை வழிநடத்தினார்.
9. அவரது தலைமையின் கீழ் இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றது.
10. காந்திஜியை 1948 ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார்.
நன்றி.
மகாத்மா காந்தியடிகள் பற்றிய 10 வரிகள்:-
1. காந்தியின் முழுப்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி.
2. காந்திஜி "இந்திய தேசத்தின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.
3. காந்தி ஜிக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
4. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி "காந்தி ஜெயந்தி" தினம் கொண்டாடப்படுகிறது.
5. காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்துள்ளது.
6. மக்கள் அவரை அன்புடன் பாபு என்று அழைப்பார்கள்.
7. அவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக "சத்தியாகிரக" இயக்கத்தை தொடங்கினார்.
8. ஆங்கிலேயரை மட்டுமின்றி அதேநேரத்தில் இந்தியர்களை ஆக்ரமித்திருந்த மதவேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
9. "செய் அல்லது செத்துமடி" (Do or Die) இதுவே காந்திஜியின் முழக்கம்.
10. மகாத்மா காந்தியின் மறைந்த நாளான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நன்றி!
நேரு பற்றி 10 வரிகள்:-
1. ஜவகர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
2. நேருவின் தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி அம்மையார்.
3. 1912-ல் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
4. நேருவின் மனைவி கமலா நேரு. இவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி (இந்திரா காந்தி] என்ற மகள் பிறந்தார்.
5. 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், நேருவை சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.
6. நேரு சுதந்திர போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். "இந்தியாவின் கண்டுபிடிப்பு", அவர் படைப்புகளில் சிறந்தது.
7. இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும்.
8. இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக "நேரு மாமா" என்று அழைப்பார்கள்.
9. இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி, சமாதானப் புறா போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
10. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள் மரணம் அடைந்தார்.
நன்றி!
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய 10 வரிகள்:-
1. பாரதிதாசன் அவர்கள் புதுவையில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் கனக சபைக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிறந்தார்.
2. இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவர் தந்தையின் மீது கொண்ட அன்பினால் தந்தையின் பெயரில் உள்ள முதற் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனக சுப்புரத்தினம் என்று அழைத்துக் கொண்டார்.
3. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார்.
4. பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
5. பாரதிதாசன் அவர்கள் தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
6. பாரதிதாசன் அவர்கள் எழுத்தாளர், திரைப்படக் கதை ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் குயில் என்னும் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
7. தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக மத எதிப்பு, சாதி மறுப்பு போன்றவற்றினை தனது பாடல் மூலம் பதிவு செய்தார்.
8. இவரது படைப்புகளில் சில பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பெண்கள் விடுதலை ஆகும்.
9. பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் "புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா "புரட்சிக்கவி " என்ற பட்டமும் வழங்கினர்.
10. பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
நன்றி!!
reference tags:
Tamil Speech | Speech in Tamil | Republics speech in tamil | Independence speech in tamil | teachers day speech in tamil | teachers day pechu poti | tamil pechu poti | suthauthanthira thinam speech in tamil | August 15 speech in tamil | kudiyarasu thina speech in tamil | pechu potti | childrens day speech in tamil | kulathaigal dhinam pechu potti | சுதந்திர தின பேச்சு போட்டி | குடியரசு தின பேச்சு போட்டி | குழந்தைகள் தின பேச்சு போட்டி
© 2025. All rights reserved.