Never Stop Learning
பழுதுபட்ட சாலையைச் சீரமைக்க வேண்டி விண்ணப்பம் எழுதுக:-
(click heading to learn how to read)
அனுப்புநர்
ஊர்ப் பொது மக்கள்,
சாட்சியாபுரம்,
சிவகாசி.
பெறுநர்
உயர்திரு நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம், சிவகாசி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: பழுதுபட்ட சாலையைச் சீரமைக்க வேண்டி விண்ணப்பித்தல் சார்பாக.
வணக்கம். நாங்கள் வசிக்கும் பகுதி சாட்சியாபுரத்தில் உள்ளது. இங்கு ஏறத்தாழ முந்நூறு வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மழையால் சேதமடைந்து, குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பழுதுபட்ட சாலையைச் சீர் அமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இடம் : சிவகாசி
நாள் : 08.09.2022
இப்படிக்கு,
ஊர்ப் பொதுமக்கள்
சார்பாக,
1. த.முரளி
2. அ.வள்ளி
3. வ.குமார்.
உறைமேல் முகவரி:-
பெறுநர்
உயர்திரு நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம்,
சிவகாசி - 626 123.


சாலை வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு ஒரு விண்ணப்பம் எழுதுக:-
(Click heading to learn to read)
அனுப்புநர்
ஊர்ப் பொது மக்கள்,
பாரதி நகர்,
விருதுநகர்.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையம்,
விருதுநகர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: சாலை வசதி வேண்டுதல் தொடர்பாக
வணக்கம். நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியானது விருதுநகர் நகரிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. இங்கு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பேருந்தில் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், நோயாளிகள் ஆகியோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் புதிய சாலை அமைத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்
நன்றி
இடம் : விருதுநகர்
நாள் : 15.09.2022
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பாரதி நகர்,
ஊர்ப் பொதுமக்கள்.
உறைமேல் முகவரி:-
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையம்,
விருதுநகர்
நடைபாதைக் கடைகளை அகற்ற கோரி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் எழுதுக:-
அனுப்புநர்
ரா. சமிதா,
130, பிள்ளையார் கோவில் தெரு,
வேலவன் காலனி,
அனுப்பானடி,
மதுரை-9
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
மதுரை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: நடைபாதைக் கடைகளை அகற்ற கோரி விண்ணப்பம்.
வணக்கம். என் பெயர் சமிதா. நான் பள்ளிக்கு தினமும் நடந்து செல்வேன். அவ்வாறு செல்லும் போது நடை பாதையில் பல கடைகள் இருப்பதால் நடப்பதற்கு சிரமமாக உள்ளது. நடைவண்டியைச் சுற்றி பொருட்கள் வாங்க ஆட்கள் இருப்பதால், சாலையில் நடக்க வேண்டி இருக்கிறது. அதனால் போக்குவரத்து தடைப்படுகிறது. விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சாலையோர கடைகளால் அந்த இடம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. விலை குறைப்பதில் வாக்கு வாதம் நடப்பதால் அதிக இரைச்சல் ஏற்படுகிறது.
நடைபாதையின் வருமானம் தான் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் நடைபாதை கடைகளை அகற்றி அவர்களுக்கு வேறு இடங்கள் தர வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
மதுரை,
20.12.2022
இப்படிக்கு
உண்மையுள்ள,
சமிதா.ரா
உறைமேல் முகவரி
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
மதுரை..
Reference tags:
Tamil kaditham | Tamil kaditham Format | Tamil formal letter writing | formal letter in tamil | kaditham in Tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | aluvalaga kaditham in Tamil | tholilmurai kaditham | Tamil letter writing | 10th standard tamil katturai | சாலை வசதி வேண்டி விண்ணப்பம் | salai vasathi venti vinnappam in tamil
© 2025. All rights reserved.