Teacher's day speech in Tamil | ஆசிரியர் பற்றிய பேச்சு

அனைவருக்கும் வணக்கம். நமது எதிர்காலத்தை கட்டியெழுப்ப அயராது முயற்சிகளை எடுக்கும் நமது ஆசிரியர்களை கவுரவிக்கும் ஒரு சிறப்பு நாள் இன்று.

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல ஆசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது.

மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தையை முதன் முதல் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர். நம் மூதாதையர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர் அவன் ஆசிரியர் தான்.

ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதில் பல பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வார்கள்.

மேலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகளை வழங்கும்.

இந்நாளில் கல்லாகவும் மண்ணாகவும் இருந்த நம்மை நல்ல பண்பாளர்களாக்கி சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக உயர்த்திய, என்றும் அணையா தியாக தீபங்களாகத் திகழும் ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும்.

நன்றி!

எனக்கு பிடித்த ஆசிரியர்

1. என் அன்பான ஆசிரியரின் பெயர் திரு. கண்ணன்.

2. அவர் எனக்கு அறிவியல் கற்பிக்கிறார்.

3. அவர் அனைத்து மாணவர்களிடமும் அன்பு கொண்ட ஒரு இனிமையான நபர்.

4. அவர் மிகவும் கண்ணியமாகவும் நட்பாகவும் இருப்பார்.

5. அவர் அறிவியல் உண்மைகளை விளக்கத் தொடங்கும் போது, ஆர்வமுள்ள மாணவர்கள் கற்பனையில் தொலைந்து போவார்கள்.

6. தன் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு புரிந்துக்கொள்வதை அவர் எப்போதும் உறுதி செய்வார்.

7. வகுப்பறையில் கல்வி பாடங்கள் தவிர பல விஷயங்களை அவர் எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

8. வகுப்பில் பலவீனமான மாணவர்களுக்கு அவர்களின் கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக அவர் சிறப்பு கவனம் செலுத்துவார்.

9. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் எப்பொழுதும் எங்களை ஊக்குவிப்பார்.

10. என் வாழ்வில் இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

reference tags:

Tamil Speech | Speech in Tamil | Republics speech in tamil | Independence speech in tamil | teachers day speech in tamil | teachers day pechu poti | tamil pechu poti | suthauthanthira thinam speech in tamil | August 15 speech in tamil | kudiyarasu thina speech in tamil | pechu potti | childrens day speech in tamil | kulathaigal dhinam pechu potti | சுதந்திர தின பேச்சு போட்டி | குடியரசு தின பேச்சு போட்டி | குழந்தைகள் தின பேச்சு போட்டி