மாமா / அத்தைக்கு கடிதம்

(click heading to learn how to read)

அன்புள்ள அத்தைக்கு,

அண்ணன் மகன் குமார் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய விரும்புகிறேன். எங்கள் ஆசிரியர் கவிஞர் மு.மேத்தா எழுதிய "கண்ணீர்ப் பூக்கள்" என்ற நூல் பற்றி கூறினார். அந்நூலில் அவர் சொன்ன சில கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நூலை முழுமையும் நான் வாசித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். திருச்சியில் அந்நூல் கிடைக்கவில்லை. எனவே சென்னையில் உள்ள புத்தக அங்காடியில் அந்நூலை வாங்கி எனக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

15,காந்தி நகர்,

திருச்சி,

நாள் : 16.08.2022

இப்படிக்கு அன்புள்ள,

குமார்.

உறைமேல் முகவரி

பெறுநர்:

திருமதி வி.செல்வி,

32, பாரதி நகர்,

சென்னை - 6.

puthagam vangi anupumaru kaditham in tamil
puthagam vangi anupumaru kaditham in tamil

அன்புள்ள மாமாவிற்கு,

நலம் நலமறிய ஆவல். என் பிறந்த நாளிற்கு நீங்கள் பரிசாக அளித்த மிதிவண்டி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த மிதிவண்டியில் தான் நான் தினமும் பள்ளிக்குச் செல்கிறேன். மிதிவண்டியில் செல்வது சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. நீங்கள் அளித்த பரிசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

14, பாரதி நகர்,

விருதுநகர்.

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள,

அனிதா.

உறைமேல் முகவரி

பெறுநர்

திரு. முருகன்,

19, கீழக்கு ரத வீதி,

கோவில்பட்டி - 627 411..

uravu murai kaditham in tamil | informal letter writing in tamil | | உறவுமுறை கடிதம்
uravu murai kaditham in tamil | informal letter writing in tamil | | உறவுமுறை கடிதம்

Reference tags:

Reference videos:

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினருக்கு கடிதம் | puthagam vaagi anupumaru kaditham in Tamil | Uravu murai kaditham | tamil kaditham | kaditham eluthuvathu eppadi | kaditham eluthum murai | கடிதம் எழுதுவது எப்படி | கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் | tamil informal letter | how to write letter in Tamil