Never Stop Learning
எங்கள் ஊர் | Engal Oor | 7th standard tamil katturai
(Click the heading to learn to read)
முன்னுரை
எங்கள் ஊர் தஞ்சாவூர். தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமான தஞ்சாவூரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
காவிரி ஆற்றின் துணை ஆறான வெண்ணாறு ஆற்றின் கரையில் தஞ்சாவூர் அமைந்துள்ளது.
பெயர்காரணம்
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்றானது.
தொழில்கள்
தஞ்சையில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு பட்டு சேலைகளும் இசைக்கருவிகளும் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
சிறப்பு மிகு இடங்கள்
தஞ்சைப் பெரிய கோவில், சரசுவதிமகால் நூலகம், கல்லணை, தஞ்சை அரண்மனை, பூண்டி மாதா கோவில் முதவியவை சிறப்பு மிகு இடங்களாகும்.
திருவிழாக்கள்
தஞ்சைப் பெரிய கோவில் சித்திரை திருவிழா, முத்துப்பல்லக்குத் திருவிழா மற்றும் காவிரி ஆற்றங்கரையில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை
'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூரைப் பாதுகாப்பது எனது கடமை.
எங்கள் ஊர்
தஞ்சாவூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊர் ஓசூர். லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் ஓசூரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
ஒசூர் பொன்னையார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
பெயர்காரணம்
ஓசூர் என்பதன் பொருள் புதூர் [புதிய ஊர்] என்பதாகும்.
தொழில்கள்
இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஓசூரைச் சுற்றி பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
சிறப்பு மிகு இடங்கள்
ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா கோவில், ராஜாஜி நினைவிடம், ராம நாய்க்கன் ஏரி மற்றும் பூங்கா முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
ஆடி மாதத்தில் நடைபெறும் கோட்டை மாரியம்மன் திருவிழா மற்றும் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன.
முடிவுரை
பழங்கள், காய்கறிகள், மலர்கள், கால்நடைகள் தொழிற்சாலைகள் என அனைத்துக்கும் பெயர் பெற்ற ஓசூரில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
மக்கள் ஒற்றுமை
திருவிழாக்கள்
முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊர் காரைக்குடி. தமிழுக்கு கோவில் கட்டிய காரைக்குடி நகரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது காரைக்குடி.
பெயர்காரணம்
காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாறியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றது.
தொழில்கள்
காரைக்குடி தனித்துவமான கட்டிடக்கலை, சுவைமிக்க உணவு மற்றும் விவசாயத்திற்கு பெயர் பெற்றது.
சிறப்பு மிகு இடங்கள்
முத்து மாரியம்மன் கோவில், தமிழ்தாய் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், ஆயிரம் ஜன்னல் வீடு, செட்டிநாடு அரண்மனை, கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா, கம்பன் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன.
முடிவுரை
செட்டிநாட்டு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் ஒரு சின்னமாக இருக்கும் காரைக்குடியைப் பாதுகாப்பது எனது கடமை.
எங்கள் ஊர்
காரைக்குடி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
TTamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | எங்கள் ஊர் கட்டுரை | 7th standard Engal oor katturai
Reference tags:
© 2025. All rights reserved.